MCCRF - A global volunteer network

W60. உன் பாட்டுக்களின் இன்னிசையை என் குரலில் ஒலிபரப்புவேன். (Whispers from Eternity - Tamil & English)



60. உன் பாட்டுக்களின் இன்னிசையை என் குரலில் ஒலிபரப்புவேன்.

என் ஆன்ம-ஆன்டெனாவை நுட்பமாகத் தொட்டு மாறுபாடுகள் செய்து, என் உள்ளொலி வானொலியை ஒத்ததிர (tuning) வைத்தேன். முதலில், நான் உன் அருகிலிருந்து வரும் குரல்களைக் கிரகித்தேன் - ஓர் ஆன்ம-இயைபின் பேரின்னிசைக் கச்சேரி, என் பாடும் இதய உணர்வு வாத்தியக்குழுவின் இனிமையான மெல்லிசை, பன்நெடுங்காலமாய் உனக்காக ஏங்கும் என் தாபங்கள் ஒன்றுபட்டு எழுப்பிய கூட்டிசை - இவையாவும் என் ஆன்ம வானொலியில் இசைத்தன. நான் மேலும் என் கிரகிப்பு மாறுபாடுகளைத் தொடர்ந்து செய்து, எல்லா ஜீவாத்மாக்களின் பரதேவதையான உன் குரலைக் கிரகிக்கக் காத்திருந்தேன்.

வரம்புகாணா பொறுமையுடன் நான் தொடர்ந்து நுட்பமாற்றங்களைச் செய்து கொண்டிருந்தேன்; அப்படியே நான் கண்ணயரப் போகும் வேளையில், உன் கீதம் என் இதயத்தில் துடிப்புடன் ஒலித்தது. உன் கீதங்களின் இன்னிசைத் தொகுப்பை என் வாழ்வின் குரலினால் பாடி அதனை நான் பரவலாக ஒலிபரப்புவேன்.


தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா


Original:
60 I will broadcast my Voice with the Chorus of Thy Songs.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!
Powered by Blogger.