MCCRF - A global volunteer network

W108. கடவுளை எல்லாவற்றிலும் பார்க்க உரிமையுடன்-வேண்டுதல். (Whispers from Eternity - Tamil & English)



108. கடவுளை எல்லாவற்றிலும் பார்க்க உரிமையுடன்-வேண்டுதல்.

இறைத்தந்தையே, மேலும், கீழும், பின்புறத்திலும், சுற்றிலும், எங்கெங்கு என் பார்வை நோக்கினும் நான் உன்னையே காணவேண்டும்! என் புலன்-குழந்தைகளை உன் வீட்டிலிருந்து வெளியேறிச் சுற்றாமலிருக்கப் பழக்கு. என் கண்களை அகத்தே திருப்பி, பொழுதோறும் புதிய தோற்றம் கொள்ளும் உன் அழகைப் பார்க்கச் செய்; என் காதுகளை எவரும்-கேட்காத உன் கானத்தைக் கேட்கப் பழக்கு. நான் உனது பரிமளமான இருப்பினால் வீசும் சுகந்தமணத்தை நுகர்வேன். கிழக்கத்திய வழக்கத்தின்படி, நான் எனது ஐந்துபுலன்களை உன் பீடத்தில் ஐந்து விளக்குகளாய் ஏற்றி உன்னை வழிபடுவேன். அதன் பிரகாரமே, விடியற்காலையின் அரும்பும் வெளிச்சம் துலங்கியதும், பிரகாசமான பகல் பொழுதிலும், மறைவாக ஒளிரும் அந்திசாயும் நேரத்திலும், வெள்ளி நிலா வெளிச்சத்திலும், உன்னை நாடி உன் முன்னிலையில் எப்போதும் என் அன்பின் ரகசிய ஒளி விளக்கை ஏற்றுவேன்.

தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா


Original:
108 Demand for seeing God in everything.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!
Powered by Blogger.