MCCRF - A global volunteer network

W121. தாயே, என்னிடம் தயையின் ரூபத்தில் வா. (Whispers from Eternity - Tamil & English)



121. தாயே, என்னிடம் தயையின் ரூபத்தில் வா.

அந்த நாள் என்று விடியுமோ, பராசக்தித் தாயே, அப்போது உன் பெயரை உச்சரிக்கையில் என் கண்களிலிருந்து கண்ணீர் வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து, என் இதயத்தின் வறட்சியைப் போக்கி, என் அறியாமையின் இருண்ட நிலைக்கதவுகளைப் பேர்த்தெறியச் செய்யும் (அந்த நாள் என்று விடியுமோ?).

பின்பு, என் கண்ணீர் வெள்ளம் தேங்கிய குளத்தில், பிரகாசமான ஞானத்தாமரை மலரும்; அதனால், என் மன இருள் முற்றிலும் அகலும். ரூபமற்றவளே, எங்கும்நிறைந்த என் பராசக்தித் தாயே, என்னால் உணரமுடியும் வண்ணம் தயை ரூபத்தில் என்னிடம் வா, வந்து என்னை சோகத்தின் கரைகளிலிருந்து மீட்டுச் செல்.

தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா


Original:
121 Come to me as Kindness.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!
Powered by Blogger.