MCCRF - A global volunteer network

W118. தியானம் துவங்குமுன் செய்யும் பிரார்த்தனை. (Whispers from Eternity - Tamil & English)



118. தியானம் துவங்குமுன் செய்யும் பிரார்த்தனை.

இறைத்தந்தையே, என் எளிய பிரார்த்தனைகள் எல்லாம் உன்மீதுள்ள மரியாதையினால் விழிப்புற்று உனது வருகைக்காகக் காத்திருக்கின்றன. என் எளிய இன்பங்கள், கோயில் மணியோசையுடன் லயித்து ஆனந்தநடனம் புரிகின்றன. என் ஏக்கங்களின் மந்தமான பறையோசை உனக்காக ஆழமாக அறைகின்றன. என் ஆசைத் தாபங்கள், என் அறியாமை, உன் பீடத்தின்முன்னர் பலிகொள்ளப்போகும் அச்சத்தில் பயந்து நடுங்குகின்றன. என் தூய கண்ணீர்த்துளிகளால் செய்யப்பட்டு, என் அன்பினால் மெருகூட்டப்பட்டப் புனிதமான மணிகளால் ஆன மாலையுடன், நான் எனது பிரார்த்தனை மந்திரங்களை ஓதுவேன். நான் என் இதயபீடத்தைப் பிராயச்சித்தத்தினால் தூய்மைப்படுத்துவேன். வா! வா! உன் வரவுக்காக நான் பிரார்த்திக்கின்றேன்!

தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா


Original:
118 Prayer before Meditation.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!
Powered by Blogger.