MCCRF - A global volunteer network

W56. என்னை மௌனியாக்கு, அதன்மூலம் உன்னிடம் விஸ்தாரமாக உரையாடுவதற்காக. (Whispers from Eternity - Tamil & English)



56. என்னை மௌனியாக்கு, அதன்மூலம் உன்னிடம் விஸ்தாரமாக உரையாடுவதற்காக.

நான் காடுகள் பலவற்றில் அலைந்து திரிந்து இடைவிடாமல் வழிதேடி, உன் இருப்பிடத்தின் ரகசிய வாயிலுக்கு வந்துசேர்ந்துள்ளேன். அந்த அமைதியான வாயிற்கதவில் என் விடா நம்பிக்கையினால் பலமாகத் தட்டி ஓசையெழுப்பினேன். வெட்டவெளியின் அக்கதவுகள் திறந்தன. ஆங்கே, உன்னதமான ஒளிரும் தரிசன பீடத்தில், நீ அமர்ந்திருப்பதைக் கண்டேன்.

நான் அலைபாயும் கண்களுடன் நீ பேசுவாயென எதிர்பார்த்துக் காத்து நின்றிருந்தேன். உன் ஆக்க-பூர்வ பிரபஞ்ச ஒலி எனக்குக் கேட்கவில்லை. இறுதியில் நிஸ்சல ஸ்திதி என்னைக் கவ்விக் கொண்டு, மெல்லிய ரீங்காரத்தில் தேவதைகளின் பாஷையில் அது எனக்கு போதித்தது. புதிதாகப் பிறந்த சுதந்திரத்தின் குளறுமொழியால் நான் பேச எத்தனித்தேன், உன் கோயிலின் விளக்குகள் திடீரென பேரொளி சிந்தி, ஒளியால் அக்ஷரங்களை எழுதிக் காட்டியது.

சிறிய என் நிசப்த அறைக்குள், நான் எப்போதும் அமர்ந்துகொண்டு: நான் வாயெடுத்துப் பேசுவதில்லை ஆனால் மௌனமொழியால் பேசுகின்றேன். என் மௌனத்தின் வழியே என்னிடம் நீ விஸ்தாரமாக உரையாடு.


தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா

Original:
56 Make me silent, that I may eloquently converse with Thee.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!
Powered by Blogger.