MCCRF - A global volunteer network

W12. மத்தியானப் பிரார்த்தனை. (Whispers from Eternity - Tamil & English)



12. மத்தியானப் பிரார்த்தனை.

உச்சிவேளையில் விண்ணுலகினின்று பகலவன் ஓங்கி ஒளிர்கின்றது: அனைத்தும் நன்கு விழிப்புடன் உள்ளன. நீ என்னை அதுபோல விழிப்புறச்செய்! நீ புலனாகாதவன், இருப்பினும் உன் சக்தி பகலவனின் கதிர்கள் வழியே ஒளிர்கின்றது. என் நரம்புநாளங்களில் உன் புலனாகா கதிர்களை நிரப்பி, என்னை வல்லவனாகவும், சோர்வுறாதவனாகவும் ஆக்கு. ஜனநெருக்கடியுள்ள தெருக்களில் எப்படி சூரியன் வெளிச்சம் தருகின்றதோ, அப்படி நான் உன் காக்கும் அன்பினை நெருக்கடியுறுத்தும் என் வாழ்வின் செயல்களிலும் நான் காணுமாறு செய். ஜனநெரிசலானதும் சந்தடியற்றதுமான தெருக்களில் எப்படி ஒளி ஸ்திரமாக, சலனமின்றி பிரகாசிக்கின்றதோ, அப்படி நான் என் வாழ்வின் நெரிசலானதும் சந்தடியற்றதுமான தெருக்களில் உலவும்போது என் சாந்தத்தையும், உறுதியையும் நான் ஸ்திரமாகக் கடைப்பிடிக்குமாறுச் செய். எனக்கு வலிமையைக் கொடு; நான் பெறுவதை, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு எனக்குக் கற்பி.

தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா


Original:
12 Prayer at Noon.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
http://www.joytoyou.com/wfe29/wfe29-p-036.htm
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!
(Courtesy of https://archive.org)
Powered by Blogger.