MCCRF - A global volunteer network

W119. என் சோகத்தின் எரிந்த சாம்பலுக்குள் மறைந்துள்ள உன் பொன்மய சாந்நித்தியத்தை நான் தேடிக் கண்டுகொண்டேன். (Whispers from Eternity - Tamil & English)



119. என் சோகத்தின் எரிந்த சாம்பலுக்குள் மறைந்துள்ள உன் பொன்மய சாந்நித்தியத்தை நான் தேடிக் கண்டுகொண்டேன்.

இறைத்தந்தையே, என்னை அமைதியாலே புறக்கணிக்காதே. நீயில்லாமல் நான் மட்டும் தனியே வாடி நிற்கின்றேன். நான் என் வேலையில் மூழ்கிச் சிறைப்பட்டு, உன்னை மறக்கும்படி ஆகாமல் செய். என்னுள்ளே உள்முகமாகச் சென்று, நான் உன்னை வெளிக்கொணர்வேன். என்னை எங்கே இருத்தியிருக்கின்றாயோ, அங்கேயே நீ வந்தருள வேண்டும். என் சோகத்தின் எரிந்த சாம்பலுக்குள் மறைந்துள்ள உன் பொன்மய சாந்நித்தியத்தை நான் தேடிக் கண்டுகொள்வேன்.


தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா

Original:
119. Hidden in the ashes of burnt sadness, I found Thy Golden Presence.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!
Powered by Blogger.