MCCRF - A global volunteer network

W22. ஆன்ம-மெய்யுணர்வுக்காக உரிமையுடன் வேண்டுதல். (Whispers from Eternity - Tamil & English)



22. ஆன்ம-மெய்யுணர்வுக்காக உரிமையுடன் வேண்டுதல்.

பிரணவ நாதமே, நீ பிரபஞ்சமயமான, அறிவார்ந்த ஒலியாய் என்னுள்ளே அதிர்ந்து ஒலிப்பாயாக. உன்னுள்ளே பிரதிபலிக்கும் கிறிஸ்து (கூடஸ்த) பேருணர்வைக் கண்டுணர எனக்குக் கற்பி. புனித நாதமே, என்னைக் கிறிஸ்து (கூடஸ்த) பேருணர்வுடன் ஐக்கியமாக்கி பிரக்ஞையடைய வழிநடத்து.

சர்வ வியாபக, பிரபஞ்ச ஒலியான ஆமென், ஓம் நாதமே, என்னுள்ளே அதிர்ந்தொலித்து, என் உணர்வுத்தளத்தை என்னுடலிலிருந்து விரித்து இப்பிரபஞ்சம் முழுதும் பரவுமாறு செய். எங்கும்-கமழ் வற்றாத ஆனந்தத்தை உன்னுள்ளே உணர எனக்குக் கற்பி.

தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா


Original:
22 Prayer-Demand for Self-Realization.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!
Powered by Blogger.