MCCRF - A global volunteer network

W157. என் ஆன்மீகக் கண்ணினை எப்பொழுதும் திறந்தே இருக்க வை.(Whispers from Eternity - Tamil & English)



157. என் ஆன்மீகக் கண்ணினை எப்பொழுதும் திறந்தே இருக்க வை.
ஆன்மீகக் கண்ணே*, ஒருமுறை திறந்த பின் என்முன் எப்பொழுதும் திறந்தே இரு. அதன்மூலம், நான் வாழ்க்கைப் பாதையிலிலுள்ள பள்ளங்குழிகளைத் தவிர்த்து, உன் சாந்தி அரண்மனைக்கு இட்டுச்செல்லும் விரைவுவழித் தடத்திற்கு செல்லமுடியும். என் எல்லாப் பிரச்சினைகளுக்கும் எனக்கு தீர்வைக் காண்பி.

---
ஆன்மீகக் கண்: மூன்றாம் கண், நெற்றிக்கண், ஒற்றைக்கண் (பைபிள்) எனவும் அழைக்கப்படும். இது புருவ மத்தியில் நெற்றிப்புறத்தில் ஜோதியாக விளங்கும் "கண்".

தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா


Original:
157 Keep my Spiritual Eye open forever.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!
Powered by Blogger.